திருக்குறள்

692.

மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும்.

திருக்குறள் 692

மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும்.

பொருள்:

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

மு.வரததாசனார் உரை:

அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.